Friday, 7 September 2012


அகராதி 
என்றால் தெரியாததற்க்கான விளக்கம். 
அல்லது 
தெரிந்ததற்க்கான சான்று. அப்படியாயின்...
எல்லாம் தெரிந்தது மனமே. 
இனி 
நம் அகராதி ...
அதனடிப்படையில்.
வான் சக்தியோ...
புவிசக்தியோ 
மகத்தானதல்ல... 
அதனை-அந்த  
மகத்துவத்தை உணர்ந்து போற்றும் 
குணத்தை விட!

நிர்வகிப்பவனுகே தெரியும்.
நிர்வாகம் எவ்வளவு பெரிதென்று.
நிர்வாகம்-உலகம்.
நிர்வாகி-அனுபவிக்கும் மனிதன்.
அப்படியானால்....
ஆராய்ச்சியாளன் யார்?
என்று 
உற்று நோக்கும் பொழுது,
ஏன்? 
என்ற ஆராய்வு நிகழலாம்.
அதன் தன்மை அனுபவம்.
ஆனால் 
என்ன? எப்படி?
என்ற 
ஆராய்வில் -ஏன்? என்ற கவனம் சிதறுகிறது.. இந்நிலையிலேயே 
விஞ்ஞான கண்டு பிடிப்புகள் பெரும்பாலும் சோர்வுகளையும் 
அதற்கேற்ற வியாதிகளையும் தருகிறது.
பிரித்தரிதலில் உள்ள பகுப் பொருள் 
பக்குவங்களாலே தவிர 
படித்த பண்டிதத்தால் அல்ல.
நம் கண்ணை 
நாமே மூடிக்கொண்டு.
இருளை கண்டு பிடித்ததாகவும் 
அதற்குள் வெளிச்சம்.
அதாவது 
மின்சாரம் கண்டு பிடித்ததாகவுமான 
நமது பிதற்றல். 
இன்னும் 
உதாரனத்திற்க்கு கூறுவோமேயானால்... 
விழி மூடிய நிலையில் 
நமது கைகளை தடவி 
பின் 
நம் விரல்களில் மோதிர விரலை 
சரியாக கண்டுபிடித்து விட்டேன்,
என்று பெருமை கொள்வதற்க்கொப்பனது.
நமது கண்டு பிடிப்புகளும் 
நம் ஆராய்ச்சிகள் பற்றிய முடிவுகளும்.

வந்து விட்ட சூழலில்,
வளர்ந்து விட்ட  நிலையில் 
ஆடு
கோழி 
அறுக்கும் கசாப்பு கடைக்காரனின் செயலே. 

புதிதாக உற்பத்தி செய்யும்... எல்லாவிதமான ஆற்றலையும், 
அனைத்துவிதமான சக்தியையும் 
பெற்றிருக்கும் மனிதனுக்கு 
பழைய 
பழகியதையே பழகி  
பார்க்குமொரு மெக்கானிக் நிலையே..
இந்நாள் மருத்துவர்களுக்கும்.

ஒரு சிறந்த மனிதனுக்கு  
தன் தாயிடம் உள்ள குறை தெரியாது.
அது போலவே.. 
இவ்வியக்கத்தகும் 
இவ்வியற்கைத்தாயை உணர்ந்தவர்களுக்கும். 

குறை என்ற ஒன்று 
அதாவது 
தீதென்றால் ஒன்றே 
அது பயம்.
அதாவது 
நம்பிக்கையின்மை.
அதாவது 
நம்மை உணராதது.. 
நம் பாக்கியங்கள் புரியாதது.
அவ்வளவே.. 
அதனால் விளைந்ததே... 

தீமைக்கும் நன்மை செய்.

தீமை என்றால் என்ன?என்பதற்கு முன்.. நமதெண்ணங்களில் 
நாம் நன்மை 
என்று  
எதனை கொண்டிருக்கிறோம்? 
அப்படியானால் 
நாம் 
நம்முடன் பழகிய நண்பர்களுடன்,
நமக்கான உதவியாளர்களுடன்,
இன்னும் 
நம் தேவைக்காகவே 
நம்முடன் இணைந்த பந்தங்களுடன் 
நாம் 
விரோதம் கொள்ளும் 
சூழலை யார் உருவாக்குவது? 
நன்மைக்கே... 
நம்மால் 
நன்மை செய்ய முடியாத 
துர்பாக்கிய நிலையில்,
நாம் பயிலும் கல்வி முறையில் 
தீமைக்கும் நன்மை செய்.
இது 
போன்ற 
முரண்பாடுகளுக்கு முதல் யாது? 

அடிப்படை அறியாததே.. நம்மை உணராததே.. 
ஒரு வெளி-
வெட்ட வெளி 
பின் 
சமவெளி. 
பின் 
விலை நிலமாக 
பகுத்தறிவு சமுதாயத்தின் சமுதாய கூடமாக.. 
அதனுள் பல அங்கமாக..
அரங்கமாக ஆசிரமமாக..மாடங்களாக..மன்றங்களாக.. 
நீதி மன்றங்களாக.. 
என 
விரியும் விவரீத விளைவுகளில்.. 
நானே.. நீதிபதியாக
நானே வாதியாக,
நானே பிரதி வாதியாக.
நானே வாதிக்கும் வழக்கறிஞராக.
இந்த சூழலாக..
சூழளுக்குண்டான செயலாக.. 
செயலுக்குண்டான...
விளக்கமாக.
அதாவது 
சொல்லாக  
மொழியாக.. 
எண்ணமாக 
மனமாக 
காணத்தகா-வெளியாக 
வெட்ட வெளியாக 
ஒளியாக ஒலியாக 
இந்த 
சுழற்சி அறியாத 
சூட்சும நிலையிலேயே.... 
நன்மை தெறியாமல் 
நம்மை அறியாமல் 
நம்மையே ஆராய்ந்து..! 
வீணடித்துக்கொண்டதை விடுத்து..

விடையில்லா வினாவாக 
நம்மை ஆட்டிவிக்கும் 
அந்த மாயத்திற்க்கான மந்திரசாவியே..
இந்த 
அகராதி.. 
இவனே..
மனம்..
பிரம்மம்..
இறைவன் 
என 
எல்லாமுமாக இனி..!

ஒரு எண்ணம்.
எண்ணத்திற்க்கான சொல்.. 
அச்சொல்லுக்கான செயல்.
இவை மூன்றுமே..
தீமையில்லாமல் வேண்டும் 
இவையே 
நம் விருப்பமாக,
பிரார்த்தனையாக... 
முயற்சியாக.
இதில் 
நமக்கு 
குழப்பமேதும் இல்லை.. அதாவது 
ஒரு செயலால்..
நமக்கோ.. 
பிறருக்கோ 
இன்றைக்கோ 
அது 
பின் ஒரு நாளுக்கோ  
அல்லது 
நம் எண்ணத்திற்க்கோ 
உடலுக்கோ 
தீங்கு வராமல் பார்த்துக்கொள்வதே.
நம் கவனமாயின்.
அதுவே 
நம்- 
பின் விளைச்சல்கள், 
விருப்பங்கள். 
விண்ணப்பங்கள். 
ஆம்.
அதாவது 
எண்ணங்கள்.
அப்படியாயின்..

தீதான நோக்கத்திற்க்குண்டான வழியில் நமதெண்ணங்களில்
சூது உறவாகும் பொழுது,
மற்ற 
எல்லாமும் தொட்டு,
தொடர்ந்து.
இவ்வாறு..
ஒருபுறம் இருக்க .. 
இதன் 
இன்னொருபுறம்.. 
நம் நோக்கம் யாது? 
அதன் 
நோக்கம்,
ஏன்? 
தீய வழி என்ற,
ஒன்றை நாடுகிறது.
அதாவது
மனம் சொல்வதை கேளாமல்.
காணும் 
காட்சியின் அடிப்படையில் 
எனக்கு,
அதாவது 
தனக்கு 
என்ன?வேண்டும்.
என்பதை விடுத்து.. 
அவன் கார் வைத்திருக்கிறான். 
ஆதலால் 
கார் வேண்டும்.
அவன்
வீட்டில் இந்த வண்ணம்.
என் வீட்டில்....
என்ற 
நிலையில்...,
இந்த 
நிலையில் 
உனக்கேன்?
எண்ணம்.
அதாவது 
மனம்.
உன் சுயத்தை விரும்பாததே.. 
உன் மேன்மை மறந்த நிலை. 

தனக்கென்ன வேண்டும்? 
என்பதை 
தீர்மானிக்க தெரியாத... 

நாம், 
நமக்கு வேண்டாத விஷயங்கள் 
அதாவது
வெறுக்கத்தக்க 
அசிங்கமான ஆபாச விசயங்களை கூட
செய்திகள் என்றும்.. 
பொது அறிவு என்றும் 
புழுதி படர்ந்த,
நீக்க முடியாத 
கரைகள் கொண்ட 
குப்பைகளை 
பொக்கிஷமாக்கி  
அதனை  
கருவூலமான 
மனதில் 
வைத்து 
பாதுகாப்பதின் 
முதல் நிலையே 
நோய். 
என்பதறிந்து,
பின்- 
தொடர்வோம்.
நம் அறியாமைகளை 
அதாவது 
அறிவாளித்தனத்தை. 

ஒரு சூழலில்... 
குழாயடிச்சண்டைக்கு 
காரணம்,
என்ன?
என்பதறிவோம்.. 

"மற்றவர்களை பற்றி புறம் பேசாதீர்கள்" 
என்ற 
அறிவுரையும் வீசிவிட்டு,
அடுத்த கணம்,
த்ரிஷாவின் 
திருட்டுத்தனத்தை 
தீவிரமாக விவாதிப்போம்.
வாசித்துவிட்ட 
வானிலை  அறிக்கைக்காகவும்.., 
அதனையே 
வேதமாக கொண்டு 
குடை எடுத்து வைத்த  
கல்லூரி பேராசிரியர்களுக்காகவும்.. 

இயற்கை கடமையாற்றியே தீர வேண்டும். 

இல்லாவிடில்...
இயற்கை 
பொய்யானதற்க்கோர் 
நீதி விளக்கம்வேறு.

விளைந்து விட்ட கருவை 
அழித்த ற்ப்பரசியர் 
பலரே,
இங்கு 
விலைமாதர் வளர்ச்சிக்கும்... 
விளைநெல் விற்பனைக்கும் 

அர்த்தம் புரியவில்லை,
எனில்  go 2 
4happylifee@blogspot.com

பருவம் மாறி மழை பெய்தது.

இயற்கை அல்ல.
உங்கள் இளமை.

என்ன இது?
தூண்டில்,

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் 
ஆம். 
பதிலும்,

அக்கேள்விக்குள்ளே தான்.
நீயே முழங்கால் 
நீயே மொட்டை தலை.

வேறுபடுத்தி 
காண வேண்டாம்
இயற்கையையும்-நம் இயல்பையும்...  

look@ me
nmkamalg.youtube.com.

No comments:

Post a Comment